மழைத்தவம்

🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️

*மழைத்தவம்*

🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️

அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும்  உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வீர்களாக.

அறிஞர் பெருமக்களே! பிரம்மஞானியர்களே!  

நாம், மழை வேட்பு தவம் இயற்றுவதற்காக இங்கே கூடியிருக்கிறோம்.

அது யாருக்கோ ஒருவருக்காக என்பதற்காக இல்லை. 

சமுதாய நன்மைக்காகத்தான் செய்யக்கூடிய ஒரு சேவை. 

இந்த இடத்தில் மனதால் எந்த அளவு விரிவு கொண்டு உணர்ந்து அதைச் செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறேன். 

பிரம்ம ஞானத்தில் இறைநிலையேதான் பிரபஞ்சமாக தரமாறி (Transformation) இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். 

அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்காக விரிந்து இருக்கிறது. 

அது விண் முதல் ஐம்பூதங்கள் வான் கோள்கள், உலகம், உயிர்கள் ஓரறிவு முதல் ஆறாம். 

அப்படி தன்மாற்றம் பெற்றுள்ள இந்தப் பிரபஞ்சத்தை எந்த மூலையிலும் எந்த இடத்திலும் எந்தப் பொருளை எடுத்தாலும் இறைவனுடைய உருவமாகவேதான் இருக்கிறது.

நாம் தொலைப்பேசியில் பேசுகிறோம்.  லண்டனில் இருப்பவர்கள் அதே பேச்சைக் கேட்கிறார்கள். 

அவர்கள் பேசுகிறார்கள். நாம் கேட்கிறோம். இந்த இரண்டு இடத்திலேயும் உள்ள இறையாற்றல் காந்த ஆற்றலாக நிறைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதனால் *மன அலைச் சுழல் எந்த அளவுக்கு அமைகிறதோ அந்த அளவுக்குத் தகுந்தவாறு* அது எங்கே வேண்டுமானாலும் அதே மன அலைச் சுழலில்

வேலை செய்யும்.

இப்போது நாம் மழைத்தவம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இது நம் வாழ்க்கையில் பல விஷயங்களில் கூட இதே தவத்திற்குரிய அடிப்படை ஆற்றலை, நெறிகளை வைத்து நாம் நலம் பெறலாம். 

மழை என்பது என்ன? 

மேகமாக இருப்பது தண்ணீராக மாறி, மழையாகக் கொட்டுகிறது. 

மேகமாக என்றால் துளியாக

இருக்கும் போது காற்றுக்கு மேலே மிதக்கிறது. 

அதை குளிர்ச்சியாக்கி ஒன்று சேர்க்கும் போது அங்கே நிற்க முடியாமல் கீழே வருகிறது.

வெட்பதட்ப நிலைதான் (Climate) வித்தியாசம்.

மனித மனம் இறையாற்றலேதான் அறிவாக இருந்து கொண்டு அதனுடைய அலையே மனமாக இருப்பதனால் தவத்தினால் அந்த மனதை ஒர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தவத்தினால் கிடைக்கக்கூடிய ஒரு நன்மை என்னவென்றால்

*ஒர்மை, கூர்மை, சீர்மை, நேர்மை* என்று நான்கு வித பலன்கள் கிடைக்கிறது. 

*இந்த நான்கு வித பலன்களையும் வைத்துக் கொண்டு,*

 *முரண் இல்லாது வாழ்ந்தோமானால் நினைப்பதை நடத்தலாம்.*

*நடக்கிறதை நினைக்கலாம்.*

*நினைப்பது எல்லாம் நடந்து விடாது.*

 ஏனென்றால் *நடக்கக்கூடியதை நினைக்க வேண்டும்.*

 அத்தகைய அறிவும் கூடிவிடும். 

இப்போது நாம் முதலில் நம்முடைய காந்த ஆற்றலை ஒருங்கிணைத்துப் பலப்படுத்த வேண்டும். 

அதற்கொரு ஐந்து நிமிடம் ஆக்கினை தவம் செய்து விட்டு, 

நம்முடைய சக்தியை, அறிவாக இருக்கக்கூடிய காந்த ஆற்றலை உடலில் மேலும் கீழுமாகச் செலுத்தி அதனுடைய இருப்பை உணர வேண்டும். 

அதனுடைய இருப்பை ஒன்று கூட்ட வேண்டும். 

அப்படியே ஆகாயத்திற்குப் போய் மேகங்களோடு கலப்புற வேண்டும். 

இது ஒரு பாவனைதான்.

*”பாவனை ஒன்றே போதும்”* 

என்று தான் பாரதி கூட சொல்லி இருக்கிறார்.

அதேபோல பாவனை என்று சொன்னால் யார் பாவிக்கிறார்கள். இறைவனேதான்

பாவிக்கிறார். 

ஆகவே அந்த முறையில் மேகங்களோடு கலந்து கொள்கிறோம். 

நீங்கள் மனதால் மேகங்களாக மாற வேண்டும். 

மாறுவதோடு அதோடு கலந்து நிற்க வேண்டும்.

இங்கே பத்து மைல் தூரம் நல்ல மழை பொழிய வேண்டும். 

நல்ல மழையாகப் பத்து மைல் தூர சுற்றளவில் பொழிய வேண்டும்

இப்படி ஏதோ ஒரு எல்லைக்கோடு போட்டுக் கொள்ளுங்கள். 

100 மைல் தூரம் கூட போட்டுக் கொள்ளலாம். 

ஒரு மைல் தூரம் கூட போட்டுக் கொள்ளலாம். அப்படியே விரிந்த நிலையில் மழை பெய்கிறது போல பாவனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

கண்ணை மூடிக் கொண்டே மழையாக நீங்கள் மாறுகிறீர்கள், 

*இந்த மாற்றம் மனதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.*

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து கொண்டு உலகை வாழ்த்தி முடித்துக் கொள்ள வேண்டும். 

இது அன்றைக்கே அப்போதே பயன் தர ஆரம்பிக்கலாம். 

ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்துக்கூட பயன் தரலாம்.

 அதைப் பற்றி கவலை இல்லை. எப்படியும் நீங்கள் செய்து வைத்த தவம் மழையாகப் பொழியும்.

இந்தத் தவத்தை நிறைவேற்றும் அளவில் உங்களுக்கு ஆற்றல் வந்து விட்டது என்றால் அந்த தைரியமும், அந்த நம்பிக்கையும் வாழ்க்கையில் கூட பல விஷயங்களில் பயன்படுத்தலாம். 

*ஆனால் ஒரு பெருமைக்காகவோ, பணத்திற்காகவவோ செய்தால் பலிக்காது.*

*நன்மைக்காக, உலக நன்மைக்காக, அதே சக்தியை எந்த விதத்திலும் பயன்படுத்தலாம்.*

ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் இதே தவத்தைச் செய்து அதன் பயனைக் காணலாம். 

இந்த தவத்தின் அனுபவங்களைச் சொல்ல வேண்டுமனால், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னதாக நான் மலேசியாவில் இருந்தேன்.

லாஸ் ஏஞ்சலிலிருந்து பத்து பேர் அடங்கிய கூட்டம் அங்கே வந்தார்கள். 

என்னைப் பார்த்து வாழ்த்து வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று வந்தார்கள் “எங்கே போக இருக்கிறீர்கள்” என்று கேட்டேன்.

 “ஹரித்துவாருக்குப் போக வேண்டும்” என்றார்கள். 

அந்த இடத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார்கள்.

ஹரி என்றால் கடவுள். துவார் என்றால் செல்லும் வழி. 

கடவுளை அடையச் செல்லும் வழி. 

அதாவது இமயமலையே தெய்வம் இருக்கக்கூடிய இடமாகவும்,  அதற்குப் போகிற வழி ஹரித்துவார் ஆகவும் வைத்திருக்கிறார்கள். 

மக்கள் கூட்டத்தில் எப்படி இருக்கும் அந்த ஊர் என்று எனக்குத் தெரியும். 

ஆறு, அதன் கரையில் ஊர்.  இருபது லட்சம், முப்பது லட்சம் பேருக்கு கூடுவார்கள். 

இடம் கிடைக்காது. இரவில் ஆற்று ஓரத்தில் மணலில் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

அங்கேயே ஏதாவது விற்பதை வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான்.  

இவர்களெல்லாம் அமெரிக்காவில் இருந்து வருபவர்கள். 

அந்த மாதிரி வாழ்க்கையில் ஈடுபட முடியுமா?

அந்த அன்பர்களில் ஒருவரை நான் கேட்டேன். 

நீங்கள் இடத்திற்காக ஏற்கனவே ஏற்பாடு பண்ணி இருக்கிறீர்களா? இல்லை என்றார்.

 அந்தக் கூட்டத்திற்கு மதுக்கர் பட்தான் தலைவராக வந்தார். 

ஒன்றும் இல்லை என்றார்.  

எங்கே போய் தங்கப் போகிறீர்கள்? அங்கே இடம் கிடைக்காதே. 

மணலில் போய் படுத்துக் கொண்டு தூங்க முடியுமா உங்களால்? 

ஏதோ நாங்கள் வந்து விட்டோம்.  என்ன செய்வது இனி? என்றார்கள்.

 *சரி.  நான் சூக்குமமாக உங்களோடு வருகிறேன்.*

 எல்லா

சௌகரியங்களை செய்து வைக்கிறேன்.  

தைரியமாகப் போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன். 

இவர்கள் டெல்லிக்குப் போனார்கள். போகிற வழியில், பாதி வழியில் ஒரு

ஓட்டல். 

அந்த ஓட்டலில் சாப்பிட்டு வெளியில் வந்தார்கள். 

ஒரு ஆள் வந்தான், ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான்.  

எங்கே போகிறீர்கள்?

ஹரித்துவாருக்குப் போகிறோம்.

ஏதாவது இடத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?

எங்களுக்கு ஒன்றுமே தெரியாது.  

இங்கே சாதாரணமாக யாருமே அணுகவே முடியாது. அவ்வளவு கூட்டம் இருக்கும்.

சரி.

ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கொடுத்தான். 

நீங்கள் இதைக் கொண்டு போய் அங்கே காண்பித்து விடுங்கள் போதும். 

இவர்கள் அதேபோல எடுத்துப் போய் காண்பித்தார்கள். 

அவர்கள் எல்லாருக்கும் தூங்குவதற்கு வசதியாக அறை ஏற்பாடு செய்து, சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து, 

 மூன்று நாளைக்கும் அவர்கள் நல்ல முறையில் இருக்க வைத்து வழி அனுப்பி விட்டார்கள்.

 இதுபோல பல நிகழ்ச்சிகள் நடக்கும்.  

*அதில் ஒரு அகம்பாவமோ, எனக்கு இவ்வளவு தெரிகிறது.*

*இவ்வளவு செய்து விட்டேன் என்று ஒரு பெருமையோ கூடாது.*

 *பணத்திற்காகவோ,பெருமைக்காகவோ அந்த மாதிரியாகச் செய்தால் அது பலிக்காது.*

ஏனென்றால், இது அகன்ற நிலையில் உள்ள சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய ஒரு பெரிய சக்தி.

அதை அப்படியே பயன்படுத்தி ஒவ்வொருவரும் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம். 

எப்படியென்றால் யாருக்கு என்ன நன்மையை நினைக்கிறோமோ, நினைப்பவனிடம் தானாகவே அத்தன்மையாக

மாறுகிறது.

அதனால் நல்லது நினைப்பவர்கள் நன்மையாகவே எல்லாப் பெருமையையும் அடைவார்கள்.  

அதுதான் காரணம்.  நீங்கள் அனைவரும் உங்களுக்குள்ளாக இருக்கக்கூடிய மகாசக்தியை முறையாகப் பயன்படுத்தி மழைத் தவம் மாத்திரம் அல்ல இன்னும் பல நன்மைகளைச் செய்யலாம். 

டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி, ஒரு கணவன் மனைவி கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகி விட்டது.  

அதன் பிறகு அவர்களுக்குள் ஏதோ சர்ச்சை.  பிரிந்து விட்டார்கள்.

 அவர்களை இணைப்பதற்கு யார் யாரோ முயற்சிக்கிறார்கள்.

 என்னென்னவோ சொல்லிப் பார்த்தார்கள் முடியவில்லை.

மந்திரக் காரனைக் கூப்பிட்டார்கள். நான் செய்து விடுகிறேன் என்றான். ஒன்றும் முடியவில்லை.

பஜாஜ் என்பவர் என்னிடம் வந்தார்.

இந்த மாதிரி என்னுடைய சொந்தக்காரர்தான் அவர். 

பெரிய செல்வந்தர்கள். கல்யாணமாகி ஒருவருடம்தான் ஆனது. 

அதன் பிறகு பிரிந்து போய்விட்டார்கள். ஒன்றும் அவர்களைக்கூட்டி வைக்க 

முடியவில்லை. என்ன செய்வது? என்றார்.

சரி, நான் பார்த்துக் கொள்கிறேன். 

அவர்களது போட்டோ ஒன்று கொடுங்கள் என்றேன்.

 போட்டோவை கொடுத்தார்கள், அதை வாங்கிக் கொண்டேன்.

 அவர்கள் இரண்டு பேரும் கையைக் கோர்த்துக் கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டும். 

இப்போதிலிருந்து நல்ல முறையில் வாழலாம் என்று அவர்கள் உறவாடுவது போன்று பாவனை செய்து, தவம் செய்து, வாழ்த்தினேன்.

இனி சரியாகிவிடும். நீங்கள் போய் வாருங்கள் என்று அனுப்பினேன். 

இரண்டு நாட்களுக்குள்ளாக சம்மந்திகள் ஒருவருக்கொருவர் பேசி, 

அந்தப் பெண்ணும், ஆணும் கூடி அதிலிருந்து நல்ல முறையில் குடித்தனம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.  

அவ்வளவு நடந்ததும் ஒரு வாரத்திற்குள். அவர்களை இணைத்து வைக்க

இவ்வளவு தூரம் நாங்கள் செய்தோம்.  எங்களால் ஒன்றும் முடியவில்லை.

 நீங்கள் எப்படி என்ன செய்தீர்கள் என்று என்னைக் கேட்டார். 

*அதை அப்படியெல்லாம் எளிதில் சொல்லி விட முடியாது. அது ஒரு வித்தையல்ல.* 

*மனப் பக்குவம்தான் என்றேன்.*

*_நாம் நினைப்பது எல்லாம் நடத்தலாம்._*

*_நடக்கக்கூடியதை நினைத்தால்தான்._*

*_சமுதாயத்திற்கு எதிர்ப்பாகவோ,  இயற்கைக்கு எதிர்ப்பாகவோ நடக்க முடியாததை நினைத்தால் நடக்காது._*

நல்ல முறையில் எல்லோரும் இந்த முறையைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று வாழ்த்தி இந்த நிகழ்ச்சியை நிறைவு

செய்கிறேன்.

*_அருள்தந்தை*

*(22.09.2002 அன்று நடந்த பிரம்மஞானப் பயிற்சியில் மழைத்தவம் அருள்தந்தை அவர்கள் நடத்தி வைத்து உரையாற்றினார்கள்).

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !! ஹீலர் பாஸ்கர்


நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !! ஹீலர் பாஸ்கர்
நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!
1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)

5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.
23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.
29. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
30. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்


உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.

🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.

🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.

🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.

🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!

🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்
💖💖💖🍎🍏🍑🍉🌺🌸

குளியல் சில நிபந்தனைகள்

உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.

அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.

🔴 1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.
🔴 2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.
🔴 3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.
🔴 4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
🔴 5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
🔴 6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.
பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.
இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
🔴 7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும்
🔴 8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
🔴 9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.


About Trichy Colleges

திருச்சி…கற்றவர்கள் தலை வணங்கும் கோயில். காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகள்.

ஒருகாலத்தில் கல்வியின் கூடாரமாக (HUB) திருச்சி இருந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம் மூவரும் இந்தியாவின் குடியரசுத்தலைவர்கள். இவர்களைப் பெற்ற ஊர் அல்ல திருச்சி. ஆனால் இவர்களை தந்த ஊர் திருச்சிதான். கல்லூரிகளால் திருச்சி அடைந்த பெருமை இது. இந்தக் கல்வி வளர்ச்சி ஒருநாளில் வந்ததல்ல. திருச்சியின் வரலாற்றில் கல்லூரிகளின் வரவை நவீன உலகோடு இளம் இந்தியாவை இணைத்த பெருமையாக பார்க்க வேண்டும்.
காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகளை கால வரிசைப்படி பார்க்கலாம்…

பிஷப் ஹீபர் கல்லூரி – 1873

தூய வளனார் கல்லூரி – 1883

தேசியக்கல்லூரி – 1919-20

புனித சிலுவைக்கல்லூரி – 1923-24

ஜமால் முகமது கல்லூரி – 1951-52

சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரி – 1951-52

பெரியார் ஈ.வே,ரா. கல்லூரி – 1965-66

உருமு தனலெட்சுமி கல்லூரி – 1970-71

திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர் திருச்சி. இன்று பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் சிறப்பாக இயங்குகின்றன. பழைய கல்லூரிகள் திருச்சிக்கு வந்த கதை சுவையானது. இன்று பலரும் தாங்கள் படித்த கல்லூரிகளோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை பார்க்க முடிகிறது. எல்லா கல்லூரிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்கள் (ALUMNI) களைகட்டுகின்றன. நட்பு புதுப்பிக்கப்படுகிறது. எல்லார் வாழ்விலும் ஒரு ’96’ உண்டுபோலும்.
திருச்சிக்கு வந்த முதல் கல்லூரி – பிஷப் ஹீபர் கல்லூரி
இன்று 13500 மாணவர்கள் படிக்கும் கல்லூரியாக வளர்ந்துள்ள பிஷப் கல்லூரி, சுவார்ட்ஸ் பாதிரியாரால் 1762 ல் எஸ்.பி.சி.கே மிஷன் மூலம் ஒரு பள்ளியாகவே தொடங்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் இயங்கிய இப்பள்ளி, அடிக்கடிவந்த புயலால் திருச்சிக்கு மாற்றப்பட்டது. இதுவே பிறகு எஸ்.பி.ஜி பள்ளியாக மாறியது. 1826 ஆம் ஆண்டு வந்த பேராயர் ரெஜினால்டு ஹீபர் பள்ளியை வளர்த்தார். எதிர்பாராதவிதமாக நீதிமன்ற வளாகத்திலுள்ள குளத்தில் குளிக்கும்போது இறந்தார். இவரின் நினைவாய் பெரும் நிதி திரட்டப்பட்டு பள்ளி வளர்ந்து, 1864-ல் தெப்பக்குளத்துக்கு அருகில் இன்றுள்ள இடத்துக்கு மாறியது.
பேராயர் ரெஜினால்டு ஹீபர் சமாதிபேராயர் ரெஜினால்டு ஹீபர் சமாதி
இதேபோன்று எஸ்.பி.ஜி பள்ளி புத்தூரில் 1870ல் தொடங்கியது. இதன் தொடர்ச்சியே 1873-ல் ஆரம்பித்த எஸ்.பி.ஜி கல்லூரி. பிறகு 1882-ல் முதல் நிலைக்கல்லூரியாக உயர்ந்தது. 1925-ல் பிஷப் ஹீபர் மறைந்த நூற்றாண்டின் நினைவாய் இக்கல்லூரி ‘பிஷப் ஹீபர் கல்லூரி’ ஆனது. புகழ்பெற்ற CSI இதை நடத்துகிறது. இந்தத் திருச்சி கல்லூரி 1934-ல் சென்னை கிறித்தவ கல்லூரியோடு சேர்க்கப்பட்டது. கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோரின் துணையோடு ஆயர் சாலமன் துரைசாமி அவர்களின் பெருமுயற்சியால் 1966-ல் மீண்டும் திருச்சிக்கு வந்தது.
பிஷப் ஹீபர் கல்லூரிபிஷப் ஹீபர் கல்லூரிபிஷப் ஹீபர் கல்லூரி
வயலூர் சாலையில் இன்றுள்ள இடத்துக்கு 1968-ல் கல்லூரி வந்தது. புதிய கட்டடங்களின் எழில் மிகுந்த தோற்றத்தால் BEAUTY BISHOP ஆனது. 2001-ல் 5 STARS தகுதியை NAAC வழங்கியது. 2007ல் A+ தரத்துக்கு உயர்ந்தது. 2011ல் EXCELLENCE நிலையை UGC வழங்கியது. இக்கல்லூரியின் ‘Library and Information Science’ தனித்துவமானது. பேராயர் த.சந்திரசேகரன் தலைவராகவும் பேரா.த.பால் தயாபரன் முதல்வராகவும் கல்லூரியை வழி நடத்துகிறார்கள்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, திரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பலரை உருவாக்கிய கல்லூரி இது. தமிழ் அறிஞர் பாவாணர், நா.மு.வேங்கடசாமி நாட்டார், சமஸ்கிருத பண்டிதர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி, மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற பூரணசந்திரன் போன்ற பலரும் பணி செய்த கல்லூரி இது.
புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி
நாகையில் பிறந்து திருச்சியில் குடிபுகுந்த கல்லூரிதான் இதுவும். உலகின் எந்த மூலையில் தமிழர்களைச் சந்தித்தாலும் அதில் ஒருவராவது ஜோஸப்பில் படித்தவராக இருப்பார். கோனார் படிக்காமல் யாரும் தமிழைத் தாண்டியிருக்க முடியாது. அந்த ஐயம்பெருமாள் கோனார் இங்குதான் பணி செய்தார். அய்யா கலாம் படித்தது எல்லோருக்கும் தெரியும். தினத்தந்தியின் ஸ்தாபகர் சி.பா.ஆதித்தனார், எழுத்தாளர் சுஜாதா, Frontline விஜயசங்கர், தேர்தல் ஆணையர் கோபால்சாமி போன்ற பலரும் இங்குதான் படித்தார்கள். சரித்திர நாவல்களின் வரலாற்றை யார் எழுதினாலும் சாண்டில்யன் பெயர் நிச்சயம் வரும். அவரும் இங்குதான் படித்தார். பேச்சில் உச்சம்தொட்ட அண்ணா பேசவிரும்பிய லாலி ஹால் இங்குதான் உள்ளது. 1905-ல் இது கட்டப்பட்டது. இப்படி நிறைய சொல்லலாம்.
புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி St. Joseph’s College
ஜோசப் பள்ளி – கல்லூரி இரண்டும் 1883 ஜனவரி 18-ல் திருச்சியின் கிளைவ் இல்லத்தில் இயங்க ஆரம்பித்தன. அப்போதே தென்னிந்தியாவின் முதல் விடுதியான கிளைவ் ஹாஸ்டலும் செயல்பட்டது. 1887-ல் பள்ளியும் கல்லூரியும் தனித்தனி தலைமையில் இயங்கத்தொடங்கின. அருட்தந்தை ஸ்வெல் கடின முயற்சியால் இப்போதுள்ள இடத்துக்குப் பள்ளியும் கல்லூரியும் வந்துசேர்ந்தன.
இக்கல்லூரியின் சிறப்புகளில் ஒன்றான ‘டிஜிட்டல் நூலகத்தில்’ 1,72,002 புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே, இங்குள்ள ‘நியூட்டன் மியூசியம்’ 1885 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட ஒன்றாகும். 2.5 லட்சம் பதப்படுத்தப்பட்ட தாவரங்களைக்கொண்ட ராபினாட் ஹெர்பேரியம் முக்கியமானது. 5 நட்சத்திர தகுதியை பெற்ற கல்லூரி இது. 2019 ஆம் ஆண்டு இக்கல்லூரி தனது 175வது பிறந்தநாளைக் கொண்டாடியது. இப்போது 7000 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.
அதிபர் அருள்திரு முனைவர் லியோனார்டு, செயலர் அருள்திரு முனைவர் எஸ்.பீட்டர், முதல்வர் அருள்திரு முனைவர் எம்.ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் தலைமையில் கல்லூரி வளர்கிறது.
புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி St. Joseph’s College
இக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை பேராலயம் பேரழகானது. 1890-ல் தொடங்கிய ஆலயப்பணி 1895-ல் நிறைவடைந்தது. இதன் கோபுரம் 205 அடி உயரமுடையது. இதன் உச்சியில் 78 கிலோ எடையில் 8 அடி உயரமுடைய சிலுவை உயர்ந்து நிற்கிறது. கோத்திக் கட்டடக்கலையின் சிறந்த உதாரணமாக இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முழுமுதல் சிற்பி தனம் சவரிமுத்து மேஸ்திரி என்னும் கன்னியாகுமரித் தமிழர்தான். இவரின் பணிக்கு நன்றி செலுத்தும் விதமாக, துறவியர் மட்டுமே அடக்கம் செய்யப்படும் கோயிலின் கீழுள்ள கல்லறையில் மேஸ்திரியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசப்பிதா வந்த தேசியக் கல்லூரி
சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘தேசியம்’ என்ற சொல்லோடு இரண்டு கல்வி நிறுவனங்களே இந்தியாவில் இயங்கின. அவற்றில் ஒன்று திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரி-தேசியப் பள்ளியாகும். தேசப்பிதா காந்தி 1927,1934 ஆம் ஆண்டுகளில் இக்கல்லூரியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசியதும், பேரா.சாரநாதன் மாணவர்கள் சார்பாக நிதியளித்ததும் மறக்க முடியாதவை. அந்த காந்தி நிழல்தான் இன்றும் ஒற்றுமையை வளர்க்கிறது.
சேஷ ஐயங்கார், சுந்தரேச சாஸ்திரிகள், வேங்கடரமண சர்மா ஆகியோர் 1886-ல் ஆரம்பித்த தேசிய உயர்நிலைப் பள்ளியே பின்னாட்களில் தேசியக் கல்லூரி வரவும் காரணமானது. பெத்தாச்சி செட்டியார், நீதிபதி சேஷகிரி ஐயர், தேசிகாச்சாரியார் போன்றோரால் ஜூன் 1919-ல் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1924-ல் முதல்நிலைக் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது. 1921 முதல் 1947 வரையான 26 ஆண்டுகள் கல்லூரியின் முதல்வராக பேரா.சாரநாதனின் பணி முக்கியமானது. திண்டுக்கல் சாலையிலுள்ள கருமண்டபம் பகுதியில் 1959, ஜூலை 8 முதல் தேசியக் கல்லூரி இயங்கத் தொடங்கியது. மொத்தம் 4600 மாணவர்கள் படித்துவருகிறார்கள். 2016 ல் A+ தகுதியை பெற்ற இக்கல்லூரி 2011-ல் Excellence தகுதியையும் அடைந்தது. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சற்குணேஷ்வரர் வேதபாடசாலையில் 15 சிறுவர்கள் சுக்ல யஜூர் வேதம் படிக்கிறார்கள்.
தேசியக் கல்லூரி
குடியரசுத் தலைவராகவிருந்த ஆர்.வெங்கட்ராமன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுதர் சி.ரெங்கராஜன், சென்னைத் தொலைக்காட்சியின் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் போன்ற பலர் இக்கல்லூரியில் உருவானவர்களே. இக்கல்லூரியின் மண்ணியல் துறை தனித்துவமானது. அதுபோலவே இங்குள்ள வேதியியல் துறை குறிப்பிடத்தக்கது. தமிழ் அறிஞர்களான ராதாகிருஷ்ணன் கு.திருமேனி, ஆ.ஜெகந்நாதன் ஆகியோர் பணி செய்தது இங்குதான். நான் இயற்பியல் படித்ததும் இக்கல்லூரியில்தான். திரு சபேசன் எனது பேராசிரியர்.
தலைவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வழக்கறிஞர் ரகுநாதன், முதல்வர் ஆர்.சுந்தரராமன் தலைமையில் கல்லூரி செயல்படுகிறது. நூற்றாண்டு விழாவைக் கல்லூரி சிறப்பாகக் கொண்டாடியது.
புனித சிலுவைக் கல்லூரி
பெண்ணுக்குள் ஞானம் வைத்த கல்லூரி இது. தென்னிந்தியாவில் தொடங்கிய மிகப்பழமையான பெண்கள் கல்லூரிகளில் ஹோலிகிராஸ் கல்லூரி முக்கியமானது. “மலைவாழை அல்லவோ கல்வி” என திருச்சிப் பெண்களைச் சொல்லவைத்த பெருமை இதற்குண்டு.புனித சிலுவைக் கல்லூரி Holy Cross College
பிரான்ஸில், சாவனாட் சகோதரிகள் புனித சிலுவை அமைப்பை 1833-ல் ஆரம்பித்தார்கள். பெண் கல்வி இவர்களின் நோக்கம். திருச்சிக்கு வந்த இவர்கள், மேரிஸ் தோப்பில் 1901ல் சிறிய பள்ளியை தொடங்க, அதுவே உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்து 1905-ல் பெரியகடைவீதிக்கு வந்தது. பின்னர் இப்போதுள்ள இடத்தை வந்தடைந்தது. இதன் தொடர் வளர்ச்சியே கல்லூரியாக 1932-ல் பரிணமித்து, ஹோலிகிராஸ் கல்லூரி உருவானது. அன்னை சோபி முதல் முதல்வரானார்.
6000 பெண்கள் படிக்கும் இக்கல்லூரிக்கு A++ தகுதியை NAAC வழங்கியுள்ளது. இங்குள்ள Community Radio 90.4 MHz ஒவ்வொருநாளும் 8 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இங்குள்ள The Holy Cross IAS Academy கிராமப்புர பெண்களுக்கு ஒரு வரம். அருட்சகோதரி முனைவர் கிறிஸ்டின பிரிஜிட் முதல்வராக கல்லூரியை வழிநடத்துகிறார்.
திருச்சி – ஊறும் வரலாறு 13: உறைந்த இசை… `திருச்சியின் மகன்’ எம்.கே.டி.பாகவதர் வரலாறு!
திருச்சியின் அலிகார் ஜமால் முகம்மது கல்லூரி
ஹாஜி M.ஜமால் முகம்மது சாஹிப், ஜனாப் N M காஜாமியான் ராவுத்தர்- இந்த இருவர் சேர்ந்து கண்ட ஒற்றைக்கனவுதான் ஜமால் முகம்மது கல்லூரி. இன்று அக்கல்லூரியில் 4,600 பெண்களையும் சேர்த்து 12,000 பேர் படிக்கிறார்கள்.
இந்த ஜீவநதியின் ஊற்று சென்னை ‘ஜமால் தங்கும் விடுதி’யில் உள்ளது. உயர்கல்வி படிக்க ஆசைப்பட்ட ஏழைகள் தங்கவும் சாப்பிடவும் ஜமால் செய்த ஏற்பாடே அந்த விடுதி. கைசெலவுக்கு மாதம் 7 ரூபாயும் கொடுத்துள்ளார். (அப்போது பவுன் 2 ரூபாயாம்) அவரின் பாரி மனசுக்கு அவர் காந்திக்கு வாரிக் கொடுத்ததே சான்று. விடுதலைப்போருக்கு நிதி கேட்ட காந்தியிடம் நிரப்பப்படாத காசோலை கொடுத்து நிரப்பிக்கொள்ளுங்கள் என இவர் சொல்ல, காந்தியோ என் மனசில் நீங்கள் நிறைந்துவிட்டீர்கள் என்றார்.
காஜாமியான் ராவுத்தருக்குச் சொந்தமான 120 ஏக்கர் நிலம் திருச்சியில் இருந்தது. அந்த இடத்தில் கல்லூரி கட்ட முடிவானது. 1947-ல் ஜமால் முகம்மது காலமான நிலையில் அவரது மகன் ஜமால் முகையதீன் தந்தையின் விருப்பப்படி கட்டடங்கள் கட்ட ரூ.2,75,000 கொடுத்தார். இவர்களின் கல்விக் கனவுதான் 1951 ஆம் ஆண்டு ஜமால் முகம்மது கல்லூரியாகப் பிறந்தது.
ஜமால் முகம்மது கல்லூரி Jamal Mohamed College
அமெரிக்காவின் டான்ஃபோர்த் பவுண்டேஷன் இந்தியக்கல்லூரிகளை தரவரிசைப்படுத்தியது. அது வெளியிட்ட 30 கல்லூரிகளில் 11வது இடத்தை ஜமால் கல்லூரி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் 1957-ல் பெற்று சாதனை படைத்தது. அதுபோலவே UGC ஜமால் கல்லூரிக்கு Excellence தகுதியை 2016-ல் வழங்கியது.
பாரிவேந்தர், சிற்பி பாலசுப்ரமணியன், ஜேம்ஸ் வசந்தன், ஆயிஷா நடராஜன், எல்.கணேசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் என்று பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.
தாளாளர் முனைவர் ஏ.கே.காஜா நஜுமுதீன், முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் மொஹிதின் தலைமையில் கல்லூரி வளர்கிறது.
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி
பெண் கல்வியையும் இந்துப்பண்பாட்டையும் முன்வைத்து, சங்கரன் பிள்ளைத் தெருவில் ‘வரிப்புலி’ என்.ராமசாமி ஐயர் 1938-ல் ஆரம்பித்த சாவித்திரி வித்யாசாலாதான் இக்கல்லூரியின் தொடக்கம். 1951 ஆம் ஆண்டு 30 ஏக்கர் பரப்பளவில் SRC என்று அழைக்கப்படும் இக்கல்லூரி இயங்கத்தொடங்கியது. இன்று 4,000 மாணவிகளுக்கு உயர்கல்வி வழங்குகிறது. இசை ஒரு பட்டப்படிப்பாக கற்பிக்கப்படுகிறது.
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரிசீதாலட்சுமி ராமசாமி கல்லூரி
இங்குள்ள சரஸ்வதி நூலகத்தில் 60,000 புத்தகங்கள் உள்ளன. A தரம் பெற்ற இக்கல்லூரியில் சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் எம்.நளினி கல்வெட்டு மற்றும் கோயில் கட்டடக்கலை ஆய்வில் குறிப்பிடத்தகுந்தவர்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். உச்சநீதிமன்ற நீதிபதி விமலா, தடகள ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமி ஆகியோர் இக்கல்லூரியில் உருவானவர்கள்தான். செயலாளர் ஆர்.பஞ்சாபகேசன், முதல்வர் முனைவர் எம். வாசுகி தலைமையில் கல்லூரி செயல்படுகிறது.
திருச்சி ஹேங்கவுட்: அழகிய சிற்பங்கள், அரூபமான ஆண்டவன் – ஆத்மநாதரின் ஆவுடையார்கோவில் அற்புதங்கள்!
பெரியார் ஈ.வே.ரா கல்லூரி
திருச்சியில் உள்ள பழைமையான அரசுக்கல்லூரி இது. எந்தப் பின்புலமும் இல்லாத எளியவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கவேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையின் விளைச்சலே இக்கல்லூரி. 1965 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தானே ஒரு கல்லூரி துவங்க விரும்பிய பெரியார், நெ.து.சுந்தரவடிவேலுவின் ஆலோசனையை ஏற்று, தமிழக அரசுக்கு 5.5 லட்சம் பணமும், ஒரு பங்களா உள்ளடக்கிய 10 ஏக்கர் நிலத்தையும் கொடுத்து, எளியவர்கள் படிக்க ஒரு கல்லூரியை கொண்டு வந்தார். 24-8-1965 அன்று அதை முதல்வர் பக்தவசலம் திறந்துவைத்தார். கல்லூரி திறப்புவிழாவில் பெரியார் மேடையில் இருந்தும் அவரைப் பேச அனுமதிக்கவில்லை என்ற செய்தியை நெ.து.சு தன் நினைவு அலைகள் நூலில் பதிந்துள்ளார்.
பெரியார் ஈ.வே.ரா கல்லூரி
இன்று இக்கல்லூரி 53 ஏக்கரில் விரிந்துள்ளது. முதல் முதல்வராக பேரா.க.பெருமாள் பணி ஏற்றார். 5,000 மாணவர்கள் உயர்கல்வி கற்கிறார்கள். முனைவர் சுகந்தி முதல்வராக வழிகாட்டுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமயம், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் இராமசாமி போன்றவர்களைத் தந்த கல்லூரி இது.
உருமு தனலெட்சுமி கல்லூரி
திருச்சி – தஞ்சை சாலையில் காட்டூரில் அமைந்துள்ள கல்லூரி இது. 1970 ஆம் ஆண்டு இக்கல்லூரியை உருமு சேஷாசலம் செட்டியார் தொடங்கினார். இதில் 3,000 மாணவருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. இக்கல்லூரி A தரச்சான்று பெற்றுள்ளது. பொன்விழா கண்ட கல்லூரி இது. பேராசிரியர்கள் கமலபதி, சத்தியசீலன், சேகர் போன்ற கல்வியாளர்கள் இங்கு பணி செய்தார்கள். செயலாளர் கல்கி இராமகிருஷ்ணன், முதல்வர் முனைவர் இரவிச்சந்திரன் வழிகாட்டலில் கல்லூரி பயணிக்கிறது.
உருமு தனலெட்சுமி கல்லூரி
திருச்சியை சுற்றி அமைந்துள்ள சற்று பழைமையான எட்டு கலை அறிவியல் கல்லூரிகளை ட்ரோன் கேமராவால் பார்த்ததைப்போல் பார்த்தோம். திருச்சியை The Cambridge of the East எனச் சொல்லவைத்த கல்லூரிகள் இவை. இந்தக் கல்லூரிகளில் மட்டும் 55,100 மாணவ/மாணவிகள் இன்று உயர்கல்வி கற்கிறார்கள். இந்தக் கல்லூரிகளின் பல ஆய்வுகள் ‘காப்புரிமை’ பெறும் தகுதியை பெற்றுள்ளன. திருச்சி கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடம், நூலகம், இணைய வசதிகளை மாணவர்கள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்தினால் நம் தரமும் உயரமும் இன்னும் அதிகமாகும் என்று தோன்றுவதைத் தடுக்கமுடியவில்லை.
பள்ளிகல்வி முடித்து உயர்கல்வி செல்வதில் இந்திய சராசரியைவிட தமிழ்நாடு இரண்டுமடங்கு மேலே இருப்பதன் ரகசியம் புரிகிறதா? கல்விதான் சமூக இழிவை துடைத்து, தனிமனிதனுக்கு அறிவுச்சுதந்திரம் தரும் என்று புரிந்துகொண்ட இந்தியாவின் முதல் மாநிலமும் தமிழ்நாடுதான். கல்வியின் சிறப்பை தமிழ்நாடு இலக்கியங்களில் மட்டும் பேசாமல் வாழ்க்கையாகவும் மாற்றியது என்பதன் துல்லியமான சான்றுதான் திருச்சி.

சென்னைக்கு புதியவர்களுக்கு

போன். 8695959595. சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!

“நான் சென்ட்ரல் வந்துட்டேன்.

கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?

பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?”

இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது ‘ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

”இந்த ஐடியா நல்லா இருக்கே?” என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,

”ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.

அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் ‘சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?

அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.

ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.

அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த ‘ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
Cell No., -> 86 95 95 95 95
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்” என்றார்.

நல்ல தொடக்கம்!

வாழ்த்துக்கள்! !!

👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.✍🏼🌹

Treatment for Cancer

புற்றுநோய் தோற்கடிக்கப்பட்டது

அன்னாசி சூடான தண்ணீர்

தயவு செய்து பரப்புங்கள்!! தயவு செய்து பரப்புங்கள்!!
இந்தப் புல்லட்டினைப் பெற்ற ஒவ்வொருவரும் பத்துப் பிரதிகளை மற்றவர்களுக்கு விநியோகம் செய்தால், ஒரு உயிராவது காப்பாற்றப்படும் என்று ஐசிபிஎஸ் பொது மருத்துவமனை பேராசிரியர் டாக்டர். கில்பர்ட் ஏ. குவாக் கூறினார்.
நான் என் பங்கில் சிலவற்றைச் செய்துள்ளேன், உங்களாலும் முடியும் என்று நம்புகிறேன்.
நன்றி!
அன்னாசி சுடுநீர் உங்கள் உயிரைக் காப்பாற்றும்
சூடான அன்னாசி புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
ஒரு கப் வெந்நீரில் 2 முதல் 3 நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து தினமும் குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது “கார நீர்”.
சூடான அன்னாசி புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களை வெளியிடுகிறது, இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றம்.
சூடான அன்னாசிப் பழத்திற்கு நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளை அகற்றும் திறன் உள்ளது. இது அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அன்னாசிப்பழ வெந்நீர் ஒவ்வாமை/அலர்ஜி காரணமாக உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுகளையும் நீக்குகிறது.
அன்னாசி பழச்சாற்றில் இருந்து பெறப்படும் மருந்து, வீரியம் மிக்க செல்களை கொன்று ஆரோக்கியமான செல்களை பாதிக்காது.
மேலும், அன்னாசி பழச்சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் அன்னாசிப் பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், உள் இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இரத்த உறைதலைக் குறைக்கும்.

படித்த பிறகு, மற்றவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சொல்லுங்கள்.*குறைந்தது ஐந்து குழுக்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும்* *சிலர் அனுப்ப மாட்டார்கள்* *ஆனால் கண்டிப்பாக அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன்*

சுய பிரகடணங்கள்

காலை எழுந்தவுடன் மனதில் இந்த வரிகளை சொல்லுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்கும்….!

எனது தேவைகளை நிறைவேற்ற கூடிய பணம் என்னிடம் நிறைய இருக்கிறது.

எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

நான் எப்பொழுதும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.

பிரபஞ்சம் என் மீது அளவற்ற வளங்களை பொழிகிறது.

என் வாழ்க்கை மிக அழகானது.

எனது சக்தியின் அளவு எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது.

எனது எண்ணம்,வாக்கு & செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன.

நான் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கிறேன்.

என்னால் வாழ்வில் எதையும் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

நான் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே நாடுகிறேன்.

என் இலட்சியங்கள் நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்.

நல்லவர்களை மட்டுமே என் வாழ்வில் ஈர்க்கிறேன்.

நான் வளமையான உணர்வுடன் வாழ்கிறேன்.

என்னைப் பற்றி சிறப்பாக உணர்கிறேன்.

என்னை நான் மதிக்கிறேன்.

எனக்குள் அமைதியை உணர்கிறேன்.

என் சமயோஜிதம் பிரமாதமாக உள்ளது.

பணம் ஒரு சக்தி நான் அதை ஈர்க்கிறேன்.

வாழ்வில் எனது பங்கை புரிந்து செயல்படுகிறேன்.

நான் மிகவும் சக்தி வாய்ந்த மனிதன்.

என் எண்ணங்கள் எப்பொழுதும் நான் விரும்பிய பாதையிலேயே செல்கின்றன.

அழகிய நிறங்களும் நல்ல சக்தியும் என் ஆராவை நிறைக்கின்றன.

என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.

என் இலட்சியங்கள் சுலபமாக நிறைவேறுகின்றன.

நான் நிகழ்காலத்தில் வாழ்கிறேன்.

வாழ்வில் எனக்கு கிடைத்த விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன்.

என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது.

நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

நான் பணத்தை ஒரு காந்தம் போல வசீகரிக்கிறேன்.

நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன்.

நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.

எனது எண்ணங்களில் சுதந்திரத்தை உணர்கிறேன்.

என்னை நான் நேசிக்கிறேன்.

எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது.

எனக்குள் ஆனந்தமும் நிம்மதியும் உணர்கிறேன்.

நான் சாதிக்கப் பிறந்தவன்.

என் மனம் தெளிவாக இருக்கிறது.

என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.

வாழ்வில் நான் தாண்டி வரும் இடர்பாடுகள் எனக்கு மேலும் சக்தி அளிக்கின்றன.

அன்பை பெறவும் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.

எனது வாழ்வை சிறப்பாக்க இந்த பிரபஞ்சமே செயல்படுகிறது.

என் உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.

என் மனம் அமைதியாக இருக்கும் பொழுது இலட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது.

தெய்வீக சக்தி எப்பொழுதும் என்னை சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.

என் ஆராவில் உள்ள நல்ல சக்தி அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது.

இந்த நொடி என்னுடையது. அதை நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்.

என் உடல் கச்சிதமாகவும் மனம் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.

என் ஆழ்மனதின் சக்தியால் வாழ்வில் அற்புதங்களை உருவாக்குகிறேன்.

நான் எங்கு சென்றாலும் நல்ல சக்தியை பரவச்செய்கிறேன்.

எனக்கு எது நல்லதோ அதையே பிரபஞ்சம் தருகிறது.

என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.

என் உடலில் பஞ்ச பூதங்களும் சம நிலையில் இருக்கின்றன.

என் வாழ்வில் சௌபாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன.

பணத்தை கவர்ந்திழுக்க உதவும் 5 வழிகள்

பணத்தை கவர்ந்திழுக்க உதவும் 5 வழிகள்

1.Pay with right feeling
நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுக்கும்போது அவர் நன்றாக இருக்க வேண்டும் மற்றும் அவருடைய தொழில் மென்மேலும் வளர வேண்டும் என்றும். நான் கொடுக்கின்ற இந்த பணம் எனக்கு பல மடங்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

2.Always pay in advance
நீங்கள் உங்களுடைய குழந்தைகளின் பள்ளிக்கட்டணம், தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், வீட்டு வாடகை, வங்கி கடன், gas bill மற்றும் இதர மாத செலவுகளை ஒரு நாள் முன்கூட்டியே செலுத்த வேண்டும். அதை செலுத்திய பிறகு அந்த ரசீது பின்புறம் இந்த கட்டணம் செலுத்தப்பட்டதற்கு நன்றி என்று எழுதலாம்.

3.Always pay extra
நீங்கள் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் போது அல்லது நடைபாதை வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கும் போது அவர்கள் சொன்ன விலையை விட கொஞ்சம் கூடுதலான பணத்தை கொடுங்கள். நினைத்து பாருங்கள் காய்கறி பழங்கள் விளைவித்தது அதை பராமரித்து அதை கஷ்டப்பட்டு கொண்டு வந்து உங்கள் கைகளில் கொடுக்கிறார்கள். அதை சாப்பிடுவதால் நம்முடைய உடலில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஒரு 20 ரூபாய்க்கு வாங்குவதற்கு பேரம் பேசுகிறோம். அவர்களுடைய உழைப்புக்கு நன்றி சொல்லி கூடுதலாக பணத்தை கொடுங்கள்.

  1. Pay with blessings
    நீங்கள் வாங்கும் விலையுயர்ந்த பொருட்கள் அல்லது ஆடம்பர உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் அதற்கான தொகையை செலுத்தும் போது அல்லது நீங்கள் ஒரு ஆடம்பரமான கார் அல்லது ஆடம்பரமான வீட்டை பார்க்கும் போது மனதார அவர்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் மற்றும் அவர்கள் இன்னொரு ஆடம்பரமான கார் அல்லது ஆடம்பரமான வீட்டை வாங்க வேண்டும் என்று வாழ்த்த வேண்டும். அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்கான மாயாஜால சமிக்ஞைகள்.
  2. Pay with greatful
    நீங்கள் ஒருவருக்கு பணம் செலுத்தும் போது அவர்களுடைய சேவையை பாராட்ட வேண்டும். ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் மிகச்சிறந்த சேவைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு முறையும் நீங்கள் செலவு செய்யும் போது உங்களுடைய மாயாஜால பணத்தை எடுத்து தொட்டு பார்த்து
“வாழ்நாள் முழுவதும் எனக்கு கிடைக்கப்பெற்ற பணத்திற்கு நன்றி ” என்று ஆத்மார்த்தமாக கூற வேண்டும்.

வாழ்க வளமுடன்
வளர்க செழிப்புடன்