🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️
*மழைத்தவம்*
🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️
அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வீர்களாக.
அறிஞர் பெருமக்களே! பிரம்மஞானியர்களே!
நாம், மழை வேட்பு தவம் இயற்றுவதற்காக இங்கே கூடியிருக்கிறோம்.
அது யாருக்கோ ஒருவருக்காக என்பதற்காக இல்லை.
சமுதாய நன்மைக்காகத்தான் செய்யக்கூடிய ஒரு சேவை.
இந்த இடத்தில் மனதால் எந்த அளவு விரிவு கொண்டு உணர்ந்து அதைச் செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறேன்.
பிரம்ம ஞானத்தில் இறைநிலையேதான் பிரபஞ்சமாக தரமாறி (Transformation) இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்ற நான்காக விரிந்து இருக்கிறது.
அது விண் முதல் ஐம்பூதங்கள் வான் கோள்கள், உலகம், உயிர்கள் ஓரறிவு முதல் ஆறாம்.
அப்படி தன்மாற்றம் பெற்றுள்ள இந்தப் பிரபஞ்சத்தை எந்த மூலையிலும் எந்த இடத்திலும் எந்தப் பொருளை எடுத்தாலும் இறைவனுடைய உருவமாகவேதான் இருக்கிறது.
நாம் தொலைப்பேசியில் பேசுகிறோம். லண்டனில் இருப்பவர்கள் அதே பேச்சைக் கேட்கிறார்கள்.
அவர்கள் பேசுகிறார்கள். நாம் கேட்கிறோம். இந்த இரண்டு இடத்திலேயும் உள்ள இறையாற்றல் காந்த ஆற்றலாக நிறைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதனால் *மன அலைச் சுழல் எந்த அளவுக்கு அமைகிறதோ அந்த அளவுக்குத் தகுந்தவாறு* அது எங்கே வேண்டுமானாலும் அதே மன அலைச் சுழலில்
வேலை செய்யும்.
இப்போது நாம் மழைத்தவம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
இது நம் வாழ்க்கையில் பல விஷயங்களில் கூட இதே தவத்திற்குரிய அடிப்படை ஆற்றலை, நெறிகளை வைத்து நாம் நலம் பெறலாம்.
மழை என்பது என்ன?
மேகமாக இருப்பது தண்ணீராக மாறி, மழையாகக் கொட்டுகிறது.
மேகமாக என்றால் துளியாக
இருக்கும் போது காற்றுக்கு மேலே மிதக்கிறது.
அதை குளிர்ச்சியாக்கி ஒன்று சேர்க்கும் போது அங்கே நிற்க முடியாமல் கீழே வருகிறது.
வெட்பதட்ப நிலைதான் (Climate) வித்தியாசம்.
மனித மனம் இறையாற்றலேதான் அறிவாக இருந்து கொண்டு அதனுடைய அலையே மனமாக இருப்பதனால் தவத்தினால் அந்த மனதை ஒர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தவத்தினால் கிடைக்கக்கூடிய ஒரு நன்மை என்னவென்றால்
*ஒர்மை, கூர்மை, சீர்மை, நேர்மை* என்று நான்கு வித பலன்கள் கிடைக்கிறது.
*இந்த நான்கு வித பலன்களையும் வைத்துக் கொண்டு,*
*முரண் இல்லாது வாழ்ந்தோமானால் நினைப்பதை நடத்தலாம்.*
*நடக்கிறதை நினைக்கலாம்.*
*நினைப்பது எல்லாம் நடந்து விடாது.*
ஏனென்றால் *நடக்கக்கூடியதை நினைக்க வேண்டும்.*
அத்தகைய அறிவும் கூடிவிடும்.
இப்போது நாம் முதலில் நம்முடைய காந்த ஆற்றலை ஒருங்கிணைத்துப் பலப்படுத்த வேண்டும்.
அதற்கொரு ஐந்து நிமிடம் ஆக்கினை தவம் செய்து விட்டு,
நம்முடைய சக்தியை, அறிவாக இருக்கக்கூடிய காந்த ஆற்றலை உடலில் மேலும் கீழுமாகச் செலுத்தி அதனுடைய இருப்பை உணர வேண்டும்.
அதனுடைய இருப்பை ஒன்று கூட்ட வேண்டும்.
அப்படியே ஆகாயத்திற்குப் போய் மேகங்களோடு கலப்புற வேண்டும்.
இது ஒரு பாவனைதான்.
*”பாவனை ஒன்றே போதும்”*
என்று தான் பாரதி கூட சொல்லி இருக்கிறார்.
அதேபோல பாவனை என்று சொன்னால் யார் பாவிக்கிறார்கள். இறைவனேதான்
பாவிக்கிறார்.
ஆகவே அந்த முறையில் மேகங்களோடு கலந்து கொள்கிறோம்.
நீங்கள் மனதால் மேகங்களாக மாற வேண்டும்.
மாறுவதோடு அதோடு கலந்து நிற்க வேண்டும்.
இங்கே பத்து மைல் தூரம் நல்ல மழை பொழிய வேண்டும்.
நல்ல மழையாகப் பத்து மைல் தூர சுற்றளவில் பொழிய வேண்டும்
இப்படி ஏதோ ஒரு எல்லைக்கோடு போட்டுக் கொள்ளுங்கள்.
100 மைல் தூரம் கூட போட்டுக் கொள்ளலாம்.
ஒரு மைல் தூரம் கூட போட்டுக் கொள்ளலாம். அப்படியே விரிந்த நிலையில் மழை பெய்கிறது போல பாவனை செய்து கொள்ள வேண்டியதுதான்.
கண்ணை மூடிக் கொண்டே மழையாக நீங்கள் மாறுகிறீர்கள்,
*இந்த மாற்றம் மனதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும்.*
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து கொண்டு உலகை வாழ்த்தி முடித்துக் கொள்ள வேண்டும்.
இது அன்றைக்கே அப்போதே பயன் தர ஆரம்பிக்கலாம்.
ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்துக்கூட பயன் தரலாம்.
அதைப் பற்றி கவலை இல்லை. எப்படியும் நீங்கள் செய்து வைத்த தவம் மழையாகப் பொழியும்.
இந்தத் தவத்தை நிறைவேற்றும் அளவில் உங்களுக்கு ஆற்றல் வந்து விட்டது என்றால் அந்த தைரியமும், அந்த நம்பிக்கையும் வாழ்க்கையில் கூட பல விஷயங்களில் பயன்படுத்தலாம்.
*ஆனால் ஒரு பெருமைக்காகவோ, பணத்திற்காகவவோ செய்தால் பலிக்காது.*
*நன்மைக்காக, உலக நன்மைக்காக, அதே சக்தியை எந்த விதத்திலும் பயன்படுத்தலாம்.*
ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் இதே தவத்தைச் செய்து அதன் பயனைக் காணலாம்.
இந்த தவத்தின் அனுபவங்களைச் சொல்ல வேண்டுமனால், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னதாக நான் மலேசியாவில் இருந்தேன்.
லாஸ் ஏஞ்சலிலிருந்து பத்து பேர் அடங்கிய கூட்டம் அங்கே வந்தார்கள்.
என்னைப் பார்த்து வாழ்த்து வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று வந்தார்கள் “எங்கே போக இருக்கிறீர்கள்” என்று கேட்டேன்.
“ஹரித்துவாருக்குப் போக வேண்டும்” என்றார்கள்.
அந்த இடத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார்கள்.
ஹரி என்றால் கடவுள். துவார் என்றால் செல்லும் வழி.
கடவுளை அடையச் செல்லும் வழி.
அதாவது இமயமலையே தெய்வம் இருக்கக்கூடிய இடமாகவும், அதற்குப் போகிற வழி ஹரித்துவார் ஆகவும் வைத்திருக்கிறார்கள்.
மக்கள் கூட்டத்தில் எப்படி இருக்கும் அந்த ஊர் என்று எனக்குத் தெரியும்.
ஆறு, அதன் கரையில் ஊர். இருபது லட்சம், முப்பது லட்சம் பேருக்கு கூடுவார்கள்.
இடம் கிடைக்காது. இரவில் ஆற்று ஓரத்தில் மணலில் படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அங்கேயே ஏதாவது விற்பதை வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான்.
இவர்களெல்லாம் அமெரிக்காவில் இருந்து வருபவர்கள்.
அந்த மாதிரி வாழ்க்கையில் ஈடுபட முடியுமா?
அந்த அன்பர்களில் ஒருவரை நான் கேட்டேன்.
நீங்கள் இடத்திற்காக ஏற்கனவே ஏற்பாடு பண்ணி இருக்கிறீர்களா? இல்லை என்றார்.
அந்தக் கூட்டத்திற்கு மதுக்கர் பட்தான் தலைவராக வந்தார்.
ஒன்றும் இல்லை என்றார்.
எங்கே போய் தங்கப் போகிறீர்கள்? அங்கே இடம் கிடைக்காதே.
மணலில் போய் படுத்துக் கொண்டு தூங்க முடியுமா உங்களால்?
ஏதோ நாங்கள் வந்து விட்டோம். என்ன செய்வது இனி? என்றார்கள்.
*சரி. நான் சூக்குமமாக உங்களோடு வருகிறேன்.*
எல்லா
சௌகரியங்களை செய்து வைக்கிறேன்.
தைரியமாகப் போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்.
இவர்கள் டெல்லிக்குப் போனார்கள். போகிற வழியில், பாதி வழியில் ஒரு
ஓட்டல்.
அந்த ஓட்டலில் சாப்பிட்டு வெளியில் வந்தார்கள்.
ஒரு ஆள் வந்தான், ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான்.
எங்கே போகிறீர்கள்?
ஹரித்துவாருக்குப் போகிறோம்.
ஏதாவது இடத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?
எங்களுக்கு ஒன்றுமே தெரியாது.
இங்கே சாதாரணமாக யாருமே அணுகவே முடியாது. அவ்வளவு கூட்டம் இருக்கும்.
சரி.
ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கொடுத்தான்.
நீங்கள் இதைக் கொண்டு போய் அங்கே காண்பித்து விடுங்கள் போதும்.
இவர்கள் அதேபோல எடுத்துப் போய் காண்பித்தார்கள்.
அவர்கள் எல்லாருக்கும் தூங்குவதற்கு வசதியாக அறை ஏற்பாடு செய்து, சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து,
மூன்று நாளைக்கும் அவர்கள் நல்ல முறையில் இருக்க வைத்து வழி அனுப்பி விட்டார்கள்.
இதுபோல பல நிகழ்ச்சிகள் நடக்கும்.
*அதில் ஒரு அகம்பாவமோ, எனக்கு இவ்வளவு தெரிகிறது.*
*இவ்வளவு செய்து விட்டேன் என்று ஒரு பெருமையோ கூடாது.*
*பணத்திற்காகவோ,பெருமைக்காகவோ அந்த மாதிரியாகச் செய்தால் அது பலிக்காது.*
ஏனென்றால், இது அகன்ற நிலையில் உள்ள சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய ஒரு பெரிய சக்தி.
அதை அப்படியே பயன்படுத்தி ஒவ்வொருவரும் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
எப்படியென்றால் யாருக்கு என்ன நன்மையை நினைக்கிறோமோ, நினைப்பவனிடம் தானாகவே அத்தன்மையாக
மாறுகிறது.
அதனால் நல்லது நினைப்பவர்கள் நன்மையாகவே எல்லாப் பெருமையையும் அடைவார்கள்.
அதுதான் காரணம். நீங்கள் அனைவரும் உங்களுக்குள்ளாக இருக்கக்கூடிய மகாசக்தியை முறையாகப் பயன்படுத்தி மழைத் தவம் மாத்திரம் அல்ல இன்னும் பல நன்மைகளைச் செய்யலாம்.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி, ஒரு கணவன் மனைவி கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகி விட்டது.
அதன் பிறகு அவர்களுக்குள் ஏதோ சர்ச்சை. பிரிந்து விட்டார்கள்.
அவர்களை இணைப்பதற்கு யார் யாரோ முயற்சிக்கிறார்கள்.
என்னென்னவோ சொல்லிப் பார்த்தார்கள் முடியவில்லை.
மந்திரக் காரனைக் கூப்பிட்டார்கள். நான் செய்து விடுகிறேன் என்றான். ஒன்றும் முடியவில்லை.
பஜாஜ் என்பவர் என்னிடம் வந்தார்.
இந்த மாதிரி என்னுடைய சொந்தக்காரர்தான் அவர்.
பெரிய செல்வந்தர்கள். கல்யாணமாகி ஒருவருடம்தான் ஆனது.
அதன் பிறகு பிரிந்து போய்விட்டார்கள். ஒன்றும் அவர்களைக்கூட்டி வைக்க
முடியவில்லை. என்ன செய்வது? என்றார்.
சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்.
அவர்களது போட்டோ ஒன்று கொடுங்கள் என்றேன்.
போட்டோவை கொடுத்தார்கள், அதை வாங்கிக் கொண்டேன்.
அவர்கள் இரண்டு பேரும் கையைக் கோர்த்துக் கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டும்.
இப்போதிலிருந்து நல்ல முறையில் வாழலாம் என்று அவர்கள் உறவாடுவது போன்று பாவனை செய்து, தவம் செய்து, வாழ்த்தினேன்.
இனி சரியாகிவிடும். நீங்கள் போய் வாருங்கள் என்று அனுப்பினேன்.
இரண்டு நாட்களுக்குள்ளாக சம்மந்திகள் ஒருவருக்கொருவர் பேசி,
அந்தப் பெண்ணும், ஆணும் கூடி அதிலிருந்து நல்ல முறையில் குடித்தனம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
அவ்வளவு நடந்ததும் ஒரு வாரத்திற்குள். அவர்களை இணைத்து வைக்க
இவ்வளவு தூரம் நாங்கள் செய்தோம். எங்களால் ஒன்றும் முடியவில்லை.
நீங்கள் எப்படி என்ன செய்தீர்கள் என்று என்னைக் கேட்டார்.
*அதை அப்படியெல்லாம் எளிதில் சொல்லி விட முடியாது. அது ஒரு வித்தையல்ல.*
*மனப் பக்குவம்தான் என்றேன்.*
*_நாம் நினைப்பது எல்லாம் நடத்தலாம்._*
*_நடக்கக்கூடியதை நினைத்தால்தான்._*
*_சமுதாயத்திற்கு எதிர்ப்பாகவோ, இயற்கைக்கு எதிர்ப்பாகவோ நடக்க முடியாததை நினைத்தால் நடக்காது._*
நல்ல முறையில் எல்லோரும் இந்த முறையைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று வாழ்த்தி இந்த நிகழ்ச்சியை நிறைவு
செய்கிறேன்.
*_அருள்தந்தை*
*(22.09.2002 அன்று நடந்த பிரம்மஞானப் பயிற்சியில் மழைத்தவம் அருள்தந்தை அவர்கள் நடத்தி வைத்து உரையாற்றினார்கள்).